விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஜூன் 2-ம் தேதி தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு வருட காலமாகவே, பள்ளிகள் திறக்கப்படாமல், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம்தான் வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. சமீப காலமாக கொரோனா பரவல் குறைந்த நிலையில், கடந்த பிப்ரவரி 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதே சமயத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வந்த நிலையில், 12ம் வகுப்புகளுக்கு நேற்றும் மற்றும் 10ம் வகுப்புகளுக்கு இன்றும் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேலும், 11ம் வகுப்புக்கு மாதம் இறுதியில் பொதுத்தேர்வு தொடங்குகிறது. நேற்று தமிழகம் முழுவதும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. நேற்று தொடங்கிய பொதுத்தேர்வு வரும் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்கள், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகள் என மொத்தமாக 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர் தேர்வுகளை எழுதுகின்றனர் என தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக மொத்தம் 3,119 தேர்வு மையங்கள் தயார் நிலையில் இருக்கின்றன.
நேற்று நடைபெற்ற 12ம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வில் பங்கேற்க 8,37,311 பதிவு செய்திருந்த நிலையில், தேர்வில் 32,674 மாணவர்கள் பங்கேற்கவில்லை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து 10ம் வகுப்புக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இந்த நிலையில், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தற்போது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஜூன் 2-ம் தேதி தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி விலக்கு…