கஜா புயலால் கால்நடைகளுக்கு தீவனம் இல்லை….!தேவைப்படும் பகுதிகளுக்கு தீவனம் வழங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு…!

Default Image

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கால்நடைத்துறை அதிகாரிகள்  தேவைப்படும் பகுதிகளுக்கு தீவனம் வழங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Image result for gaja cyclone ANIMAL DEATH

தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர் ,புதுக்கோட்டை , திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர்,புதுக்கோட்டை மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கால்நடைத்துறை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து தேவைப்படும் பகுதிகளுக்கு தீவனம் வழங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்