கஜா புயல் பாதிப்பு…!மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  நாளை ஆய்வு…!

Default Image

கஜா புயல் பாதிப்புகளை  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  நாளை ஆய்வு செய்கிறார்.

தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர்,புதுக்கோட்டை ,திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர்.

 

புயலின் பாதிப்பில் சரியாக மீட்புப்பணி , நிவாரணம் வராத நிலையில் மக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கஜா புயல் பாதிப்புகளை  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  நாளை ஆய்வு செய்கிறார்.இதற்காக அவர் நாளை தமிழகம் வருகிறார்.அதன் பின்னர் பிற்பகலில் ஆய்வு மேற்கொள்ள செல்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்