திருமாவளவனை விமர்சித்த வழக்கில் காயத்ரி ரகுராமுக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கடந்த 2019-ஆம் ஆண்டு இந்து கோவில்களின் அமைப்புகள் குறித்து ஒரு கூட்டத்தில் பேசி இருந்தார் இது இந்து கோவில்களுக்கு எதிராக உள்ளதாக சர்ச்சை எழுந்தது.
இதனால், கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்தார். அதில், இந்துக்கள் திருமாவளவனுக்கு புடவை அனுப்புங்கள், திருமாவளவனுக்கு தைரியம் இருந்தால் நேருக்கு நேர் என்னிடம் இந்துக்கள் குறித்து பேச சொல்லுங்கள் என்று பல கருத்துகளை தெரிவித்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் காசி என்பவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், திருமாவளவன் குறித்து நடிகை காயத்ரி ரகுராம் அவதூறு கருத்துக்களை தெரிவித்தார். இது அவருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே நடிகை காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
காயத்ரி ரகுராமுக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி வழக்கை ஜூலை 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
ஆஸ்திரேலியா : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
சென்னை : அத்திக்கடவு-அவிநாசி 17 ஆகஸ்ட் 2024 அன்று நிறைவேற்றுப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி…
சென்னை : காதலர் தினமான வருகின்ற பிப்ரவரி 14 அன்று தமிழ் சினிமாவில் இருந்து ஒத்த ஓட்டு முத்தையா, 2கே…
குஜராத் : இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான…
திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில்…
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…