குடியுரிமை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த சட்டத்தில் மத ரீதியிலான பாகுபாடு காட்டப்பட்டுள்ளது என கூறி இந்தியா முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டமானது தமிழகத்திலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாணவர்கள் , தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக ஒன்றாக இணைந்து அமைதி வழியில் வாயில் கருப்பு துணி கட்டி கொண்டு மத்திய மாநில அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில்பெண் ஒருவர் ,ஒவ்வொரு இந்தியர்களும் தாங்கள் இந்தியர்கள் என்று ஆதாரங்களைக் காட்டவேண்டும் என கூறுவது எந்த வகையில் நியாயம். மேலும் ஒரு வெளி நாட்டைச் சேர்ந்தவருக்கு ஆதாரங்கள் இல்லை என்றாலும் அவர்களுக்கு ஆதாரங்களை எடுத்துக் கொடுத்து அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குகின்றன.
ஆனால் இந்தியாவிலேயே இருக்கும் இந்தியர்கள் மட்டும் ஏன் ஆதாரங்களைக் காட்டவேண்டும் என கூறுகிறார்கள். சிலருடைய ஆதாரங்கள் வெள்ளத்திலும் ,வீடு வீடாக மாறி செல்லும்போதும் காணாமல் போகிறது .அப்படியிருக்கையில் எப்படி அவர்கள் ஆதாரங்களை நிரூபிக்க முடியும் என கூறினார்.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…