வருகின்ற 2021 ஆம் ஆண்டு 1 ஆம் தேதி முதல் சென்னை மாநகராட்சியிலுள்ள மக்கள் குப்பை கொட்டுவதற்கு ரூபாய் 100 கட்டணமாக வஸோலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1-ஆம் தேதி முதல் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கலாம் என திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி இது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குப்பைகளை கொட்டுவதற்கு வீடுகளுக்கு 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும் வசூலிக்கலாம் எனவும், வணிக இடங்களுக்கு 1000 முதல் 7500 வரை கட்டணமாக வசூலிக்கவும், உணவு விடுதிகளில் 300 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரையிலும், திரையரங்குகளில் 750 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரையிலும் கட்டணம் வசூலிக்கலாம் என அறிவித்துள்ளது.
மேலும் பொது இடங்களில் நிகழ்ச்சி நடத்துபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரையிலும் மருத்துவமனைகள் 2000 ரூபாய் முதல் நான்காயிரம் ரூபாய் வரையிலும் கட்டணம் செலுத்தலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் விதிகளை மீறி குப்பைகளை கொட்டு பவர்களு க்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 500 ரூபாய் வரையிலும், கட்டட கழிவுகளை 5,000 ரூபாய் வரையிலும் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. தரம் பிரித்து குப்பைகளை கொடுக்கத் தவறும் பட்சத்தில் 5000 ரூபாய் வரையிலும் குப்பைகளை எரிப்பவர்களுக்கு 2,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சண்டிகர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்.08) மோதுகின்றது.…
சென்னை : வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ரூ.818.50…
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…