கஜா புயல்…! அரசு,தனியார் ஊழியர்களை மாலை 4 மணிக்குள் வீடு திரும்ப தமிழக அரசு உத்தரவு …!

Default Image

அரசு மற்றும் தனியார் ஊழியர்களை மாலை 4 மணிக்குள் வீடும் திரும்பும்படி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கஜா புயலையொட்டி பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கஜா புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Image result for gajacyclone

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில்,கஜா புயல் காரணமாக  அரசு மற்றும் தனியார் ஊழியர்களை மாலை 4 மணிக்கு முன்பாக  வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. கஜா புயல் கரையை கடக்கும் குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் ஊழியர்களை மாலை 4 மணிக்கு முன்பாக உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. கஜா புயல் காரணமாக கடலூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களை மாலை 4 மணிக்கு முன்பாக வீட்டுக்கு அனுப்ப தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.புயல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்