கஜா புயல் பாதிப்பு…!இன்று மத்திய குழு தமிழகம் வருகிறது…!முதலமைச்சர் பழனிசாமி

Default Image

கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு இன்று  தமிழகம் வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நேற்று  கஜா புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

இதன் பின் டெல்லியில் முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில், கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு இன்று  தமிழகம் வருகிறது.அதிமுக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை கஜா புயல் நிவாரணத்திற்காக வழங்குவார்கள்.புயல் பாதித்த பகுதிகளின் புகைப்படங்களை பிரதமரிடம் காண்பித்து நிதி கோரப்பட்டுள்ளது.தமிழக அரசு கோரியுள்ள நிதியை மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்