கஜா புயல் பாதிப்பு :2 வாரத்தில் நிவாரண நிதி அறிவிப்பு..!மத்திய அரசு

Default Image

கஜா புயல் பாதிப்பு தொடர்பாக தமிழகத்திற்கு மேலும் எவ்வளவு நிதி ஒதுக்கலாம் என்பதை 2 வாரத்தில் மத்திய அரசு அறிவிக்கும் என்று  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதி மன்றம் மதுரை கிளையில், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி, வழக்கறிஞர் ஸ்டாலின் உள்பட பலர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
Image result for கஜா
இந்த வழக்கில்  தமிழக அரசின் வழக்கறிஞர் வாதத்தின்போது, மத்திய அரசிடம், மாநில பேரிடர் நிவாரண நிதியில் போது மான நிதி இருந்தும், தமிழகத்திற்கு கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு தரவில்லை என்று தெரிவித்தது.
பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதிகள் கஜா புயல் நிவாரணம் குறித்து, மத்தியஅரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இன்று பதில் அளிக்க மத்திய அரசுக்கு  உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.அதில்  மாநில பேரிடர் நிவாரண நிதியில் உள்ள ரூ.1277.62 கோடி தொகையை கஜா புயல் நிவாரணத்திற்கு தமிழக அரசு பயன்படுத்தி கொள்ளலாம்.கஜா புயல் பாதிப்பு தொடர்பாக தமிழகத்திற்கு மேலும் எவ்வளவு நிதி ஒதுக்கலாம் என்பதை 2 வாரத்தில் மத்திய அரசு அறிவிக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்