கரையை நெருங்கும் கஜா புயல் …! 50கிமீ தொலைவில் கஜா புயல் ..!

Default Image

புயலின் முன் பகுதி கரையை கடக்க தொடங்கியுள்ளது என்று வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.

தற்போது வானிலை ஆய்வு  மையம் வெளியிட்ட அறிவிப்பில், புயலின் முன் பகுதி கரையை கடக்க தொடங்கியுள்ளது. சிறிது நேரத்தில் கண் பகுதி கரையைக் கடக்க தொடங்கும். புயலின் முன் பகுதி கரையை கடக்க தொடங்கும் போதே காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். கண் பகுதி கரையை கடக்கும் போது காற்றின் வேகம் குறையும்.வேதாரண்யத்தின் வடகிழக்கே 50கிமீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது.

கஜா புயல் அதிகாலை 3 மணியளவில் கரையை முழுமையாக கடக்கும்.புயல் முழுமையாக கரையை கடக்க 2 முதல் 3 மணி நேரம் ஆகும், கரையை கடந்த பிறகு காற்றின் வேகம் குறையும் என்றும் வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்