சென்னை:திருமண முன்பதிவுகள் குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சியிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று திருமண மண்டபங்களுக்கு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது,குறிப்பாக தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2,731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக மருத்துவத்துறை தெரிவித்தது. அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒரே நாளில் 1,489 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில்,கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில்,திருமண முன்பதிவுகள் குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சியிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று திருமண மண்டபங்களுக்கு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
கோயில்கள்,சமூக நல கூடங்கள்,ஹோட்டல்களில் நடைபெறும் திருமண நிகழ்வுகளையும் முன்னரே தெரிவிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி,திருமண முன்பதிவுகளை சென்னை மாநகராட்சியின் இணையதளம் வாயிலாக முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக,திருமண நிகழ்வுகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ககன்தீப் சிங் பேடி அவர்கள் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம்…
ஹைதராபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. வழக்கமாக இந்த சீஸனில் இதுவரை…
பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…