செட்டிநாடு குழுமம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்றும் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை எழும்பூரில் உள்ள செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான இடத்தில் அமலாக்கத்துறையினர் 3-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
செட்டிநாடு குழுமம் வெளிநாட்டில் ரூ.110 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் வாங்கியதற்கான ஆவணங்களும், பல்வேறு வங்கிகளில் நிரந்தர வைப்புத்தொகை வைத்ததற்கான ஆதாரத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2020ல் வருமான வரி சோதனையில் ரூ.23 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ரூ.700 வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செட்டிநாடு குழுமத்தின் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் எஃப்.ஐ.ஆர் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
எனவே, செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான 6க்கும் மேற்பட்ட இடங்களில் மூன்றாம் நாளாக இன்று சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…