இலங்கை தாக்குதல்.. சிறை சந்திப்பு.. கோவை கார் வெடிப்பில் வெளிவரும் பரபரப்பு தகவல்கள்….

Published by
மணிகண்டன்

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பரோஸ் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கேரள சிறையில் இருப்பவர்களை சந்தித்து பேசியுள்ளார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த ஞாயிற்று கிழமை அதிகாலை கோவை, உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷ் முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். பின்னர் எரிந்து சேதமான கார், மற்றும் முபின் வீட்டில் சோதனையிட்ட போலீசாருக்கு பல்வேறு தடயங்கள், 76கிலோ வேதிப்பொருட்கள் கிடைத்திருந்தது.

இதனை அடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, முபினுக்கு உதவியதாக அவருக்கு நெருக்கமான முகம்மது தல்கா, முஹம்மது அசாருதீன், முகமது ரியாஸ், பரோஸ் இஸ்மாயில், முஹம்மது நவாஸ் இஸ்மாயில் என 5 பேரை தமிழக காவல் துறையினர் முதற்கட்டமாக கைது செய்தனர்.

இதனை அடுத்து நடைபெற்ற சோதனையில், அப்சர் கான் என்பவர் 6வது நபராக கைது செய்யப்பட்டார். மேலும் இந்த சோதனை கோவையை தாண்டி திருநெல்வியிலும் தொடர்ந்தது. நெல்லையில், முகமது காதர், முகமது உசேன் ஆகியோரிடம் 3 மணிநேரம் விசாரணை நடத்தினர். அவர்கள் வீட்டிலும் சோதனை செய்தனர்.

அதன் பிறகு, தமிழக முதல்வர் விடுத்த கோரிக்கையின் பேரில், இந்த வழக்கு, தமிழக காவல் துறையிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது.

தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு திடுக்கிடும் திருப்பங்கள் வெளியாகி உள்ளன. அதாவது, முதற்கட்டமாக கைதானவர்களில் பரோஸ் இஸ்மாயில், என்ஐஏவால் கைது செய்யப்பட்டு கேரள சிறையில் உள்ள ரஷீத் அலி, முகமது அசாருதீன் ஆகியோரை சந்தித்துள்ளார்.

மேலும், முகமது அசாருதீன், 2019இல் இலங்கையில் நடந்த தேவாலய தாக்குதலில் ஈடுபட்ட அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதலால்  ரஷீத் அலி, முகமது அசாருதீன் உடனான சிறை சந்திப்பில் என்ன நிகழ்ந்தது என்பது பற்றி என்ஐஏ அதிகாரிகள் பரோஸ் இஸ்மாயிலிடம் தீவிர விசாரணையில் ஈடுபாடு வருகின்றனர்.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

9 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

9 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

10 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

10 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

10 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

10 hours ago