வீட்டு வாடகை கேட்டதால் ஆத்திரம் ! உரிமையாளர் குத்தி கொலை

Published by
பால முருகன்

குன்றத்தூரில் 4 மாதம் வீட்டு வாடகை கேட்டதால்  வீட்டின் உரிமையாளரை ஓட ஓட கத்தியை வைத்து குத்திய நபர்.

திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் குணசேகரன் இவர் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர், மேலும் இவர் குன்றத்தூரில் இரண்டு வீடுகள் கட்டியுள்ளார், ஒரு வீட்டை வாடகைக்கு அஜித் என்பவருக்கு கொடுத்துள்ளார் மற்றோரு வீட்டில் குணசேகரன் வசித்து வந்தனர். இந்த நிலையில் அஜித் ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லமுடியாமல் இருந்தார்.

அஜித் கடந்த 4 மாதங்களாக வீட்டு வாடகை செலுத்தவில்லை என்பதால் வீட்டின் உரிமையாளர் குணசேகரன் நேற்று இரவு அஜித் வீட்டிற்கு சென்று வாடகை கேட்டுள்ளார், அப்பொழுது வீட்டில் அஜித் இல்லை, அதனால் குணசேகரனுக்கும் அஜித் குடும்பத்தாருக்கு வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நள்ளிரவில் வீட்டிற்கு வந்த அஜித்திடம் அவரது குடும்பத்தார் வாடகையை கேட்டதை பற்றி கூறியுள்ளார், உடனடியாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது, இதில் ஆத்திரமடைந்த அஜித் வீட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை குத்தியுள்ளார், குத்தியவுடன் குணசேகரன் வேகமாக ஓடியுள்ளார் மேலும் அஜித் விடாமல் ஓட ஓட குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார்.

உடனடியாக குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குணசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர், பின் கொலையாளி அஜித்தையும் கைது செய்தனர், இந்த கொலை அந்த பகுதியில் அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

சிறுமி உயிரிழப்பு எதிரொலி : மழலையர் பள்ளி உரிமம் ரத்து!

சிறுமி உயிரிழப்பு எதிரொலி : மழலையர் பள்ளி உரிமம் ரத்து!

மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில்…

40 minutes ago

Live : கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து முதல்… பஹல்காம் தாக்குதல் நடவடிக்கை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்…

1 hour ago

“அடுத்த 36 மணி நேரத்தில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும்” – பாகிஸ்தான் அமைச்சர் குற்றச்சாட்டு.!

இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…

2 hours ago

“எங்களிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன” பாகிஸ்தானுக்கு பரூக் அப்துல்லா எச்சரிக்கை.!

காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…

3 hours ago

இன்று சென்னை vs பஞ்சாப்.., சேப்பாக்கத்தில் விசில் பறக்குமா? பயிற்சியாளர் சொன்ன பாசிட்டிவ் தகவல்.!

சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…

3 hours ago

விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு.!

விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…

4 hours ago