ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை என 815 பக்கங்கள் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அந்த தீர்ப்பின் முழு விவரம் வெளியானது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2018- ம் ஆண்டு, மே 22-ல் நடைபெற்ற ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தியதில், 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, 2018 மே 28- ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
இதனையடுத்து வேதந்தா நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்பொழுது ஸ்டெர்லைட் அலையை திறக்க திறக்க அனுமதியில்லை என்று 815 பக்கங்கள் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் அந்த வழக்கினை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிந்ததும், தூத்துக்குடியில் மக்கள் வெடி வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதற்கு பல அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் 815 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் முழு விவரம் வெளியானது. அதில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்ற அரசின் முடிவு நியாயமானது என அந்த தீர்ப்பின் விபரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…