ஆண்டிபட்டியில்  இன்று முதல் 10 நாட்கள் முழு ஊரடங்கு.!

Default Image

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில்  இன்று முதல் 10 நாட்கள் முழு ஊரடங்கு.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடைமுறைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.,மேலும், தேனி மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து தான் வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் தேனி மாவட்டத்தில் 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதித்தோர் எண்ணிக்கை 1,128 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தாசில்தார் சந்திரசேகரன் தலைமையில் நடந்த அதிகாரிகள் கூட்டத்தில் இன்று (ஜூலை 7) முதல் (ஜூலை 17) வரை 10 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்