சேலம் மாவட்டத்தில் இரு தினங்களுக்கு முழு ஊரடங்கு – மாவட்ட ஆட்சியர்

Default Image

சேலம் மாவட்டத்தில் மருந்து கடைகள் தவிர அனைத்து அத்தியாவசிய கடைகளும் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் இன்று மதியம் 1 மணி முதல் திங்கட்கிழமை காலை வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் மருந்து கடைகள் தவிர அனைத்து அத்தியாவசிய கடைகளும் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த இரு தினங்களில் இறைச்சி கடை மற்றும் அத்தியாவசிய கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் அதனை கண்டித்து இரு தினங்களுக்கு முழுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். இதனிடையே நேற்று மட்டும் சேலத்தில் 5 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் 29 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் நெல்லை மாநகரில் ஏப்ரல் 26 மற்றும் மே 03 ஆகிய 2 தினங்கள் (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என ஆணையர் கண்ணன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்