தென்காசியில் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு! டாஸ்மாக் கடைகள் திறக்கப்படமாட்டாது!

Default Image

தென்காசி மாவட்டம் வீரக்கேரளம்புதூர் தாலுகாவுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று வருவாய் வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், சில கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பெரிய கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று டாஸ்மாக் காடைகள் திறக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 5 மணி வரை திறக்கப்படும் என்றும், நாள் ஒன்றுக்கு ஒரு கடையில் 500 பேருக்கு மட்டுமே டோக்கன் கொடுக்கப்படும் என்றும், கடைக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தென்காசி மாவட்டம் வீரக்கேரளம்புதூர் தாலுகாவுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று வருவாய் வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் மக்கள் தேவையின்றி வெளியே வரக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், 3 நாட்களுக்கு அங்கு டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்