கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை, கோவை, மதுரை போன்ற மாநகரில் வரும் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதாவது, 29 ஆம் தேதி இரவு 9 மணி வரை இந்த முழு ஊரடங்கு இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். இந்த முழுமையான ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள மட்டுமே அனுமதி என்றும் மருத்துவமனை, மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகளுக்கு மட்டுமே அனுமதி என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் விதிமுறைகளின்படி செயல்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுபோன்று சேலம், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ( இரவு 9 மணி வரை) 3 நாட்களுக்கு முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். இதனிடையே தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பாதிப்பு எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. இதுவரை 1,683 பேர் பாதிக்கப்பட்டு, 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். இந்த ஊரடங்கை மீறுபவர்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…