சென்னை, கோவை, மதுரையில் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு – முதல்வர் பழனிசாமி அதிரடி

Default Image

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று  முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை, கோவை, மதுரை போன்ற மாநகரில் வரும் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதாவது, 29 ஆம் தேதி இரவு 9 மணி வரை இந்த முழு ஊரடங்கு இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். இந்த முழுமையான ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள மட்டுமே அனுமதி என்றும் மருத்துவமனை, மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகளுக்கு மட்டுமே அனுமதி என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் விதிமுறைகளின்படி செயல்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுபோன்று சேலம், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ( இரவு 9 மணி வரை) 3 நாட்களுக்கு முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். இதனிடையே தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பாதிப்பு எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. இதுவரை 1,683 பேர் பாதிக்கப்பட்டு, 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். இந்த ஊரடங்கை மீறுபவர்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்