தேர்தலுக்கு பின் முழு ஊரடங்கா…? – சுகாதாரத்துறை செயலர்

Default Image

வரும் 7-ம் தேதிக்கு பின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். 

சமீப நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை வருகிறது. தற்போது நாடு முழுவதும், தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிற நிலையில், தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே, மக்களை விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், தற்போது தேர்தலுக்கு பின், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என செய்திகள் வெளியாகி வருகிறது. இதுகுறித்து, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், ‘தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை. இதுகுறித்து வெளியாகும் வதந்தியான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், வரும் 7-ம் தேதிக்கு பின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்