மின் உற்பத்தியை அதிகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்.
திமுக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர், கூறுகையில், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீடு செய்து, மின் கட்டணம் வசூல் செய்வதால் 200 யூனிட் மற்றும் 300 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மின் கட்டணம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகமாக மின் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க மாதம் ஒருமுறை மின் உபயோகம் கணக்கிடப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும் கோடை காலம் ஆரம்பித்துவிட்டதால் மின் உபயோகம் அதிகமாகும். இதனால் மின்தடை ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் உற்பத்தியை அதிகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…