இன்று முதல் +1 மாணவர்கள் மற்றும் +2 மறுதேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

Default Image

இன்று முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கான விடைத்தாள் மற்றும் மறுகூட்டலில் பிளஸ் 2 மறு தேர்வு எழுதியவர்களுக்கு விடைத்தாள்கள் பள்ளியில் அல்லது தேர்வு எழுதிய மையத்தில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பிளஸ் 1 மாணவர்கள் இன்று விடைத்தாள் நகல்களை பெறவும், மதிப்பெண் மறுகூட்டல் செய்யவும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி அவர்கள் கூறியுள்ளார். அதேபோல மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பிளஸ் 1 மாணவர்கள் இன்று முதல் 12ஆம் தேதி வரையும், பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் ஆகஸ்ட் 5 6 7 ஆகிய மூன்று நாட்களிலும் பள்ளிகள் மற்றும் தேர்வு எழுதிய மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

விடைத்தாள் நகல் எல்லா பாடங்களுக்கும் 275 ரூபாய் எனவும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் உயிரியல் பாடத்தில் 305 ரூபாயும் மற்ற படங்களுக்கு 205 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்