சிலிண்டர் விலை ரூ.414 முதல் ரூ.1,118 வரை உயர்ந்துள்ளதாக உங்களில் ஒருவன் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உங்களில் ஒருவன் எனும் நிகழ்வு மூலம் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தனது பதிலை அளித்து வந்தார். அப்படி இன்று அவர் வழங்கிய பதில்கள் வீடியோ வாயிலாக வெளியாகியுள்ளது. அதில் அவர் பல்வேறு கேள்களுக்கு அசராமல் பதில் கூறி வந்தார்.
அப்போது அவரிடம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, இந்தியா வளர்ச்சியடைந்துள்ளது என பாஜக கூறிவருகிறது, 2014இல் பாஜக ஆட்சிக்கு வந்த போது சிலிண்டர் விலை 414 ரூபாயாக இருந்தது தற்போது 1,118.50 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் ரூ.72.26 என இருந்தது, தற்போது ரூ.102.63 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் டீசல் விலை 2014இல் ரூ.55.49 இலிருந்து தற்போது ரூ.94.24 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா வளர்ச்சியடைந்துள்ளதாக பாஜக கூறிவருவது, இத்தகைய வளர்ச்சியைத்தான் என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார், மேலும் பாஜக 2014இல் ஆட்சிக்கு வந்த போது இந்தியாவிற்கு இருந்த கடன் தொகை 54 லட்சம் கோடியிலிருந்து 147 லட்சம் கோடி வரை உயர்ந்து 3 மடங்கு அதிகரித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…