Live : பாஜகவில் இணைந்த கைலாஷ் கேலோட் முதல்…அதிமுகவுக்கு ‘NO’ சொன்ன தவெக வரை..!

இன்றைய நாளின் முக்கிய செய்தித் துளிகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது....

LIve 2 - BJP - TVK

சென்னை :  ஆம் ஆத்மி கட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த கைலாஷ் கேலோட். நேற்று அமைச்சர் பதவியில் இருந்து விலகி, ஒரே நாளில் பாஜகவில் இணைந்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசியல் வட்டாரத்தில், அதிமுக தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என பேசப்பட்டு வந்த நிலையில், ‘திமுகவுடன் கூட்டணி இல்லை எனவும் அதிமுகவுடன் கூட்டணி குறித்த இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது எனவும்’, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

1 of 1
மணிகண்டன்

நடை சாத்தப்பட்டது :

  • திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் உயிரிழந்ததை அடுத்து, கோயில் நடை 45 நிமிடங்கள் சாத்தப்பட்டது. பரிகார பூஜைகள் முடிந்த பிறகே கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.
  • மணிகண்டன்

    ஓய்ந்தது பிரச்சாரம் :

  • மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் (2ஆம் கட்டம்) மாநில சட்டப்பேரவை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுவதை ஒட்டி இன்று மாலை 5 மணிக்கு தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றது.
  • கெளதம்

    மணிப்பூர் விரையும் 5000 வீரர்களை : :

  • வன்முறை தொடரும் சூழலில் 5000 வீரர்களை கொண்ட 50 பட்டாலியன் துணை ராணுவத்தை மணிப்பூருக்கு அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
  • மணிகண்டன்

    ஒரே நாடு ஒரே தேர்தல் :

  • நாட்டில் முன்னேற்றம் காண, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தேர்தல் நடத்த வேண்டும். வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இத்திட்டம் தாக்கல் செய்ய வாய்ப்பு என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
  • கெளதம்

    உள்ளூர் விடுமுறை:

  • கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு டிச.3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.
  • கெளதம்

    திரையரங்க உரிமையாளர்கள் கவனத்திற்கு:

  • திரையரங்க வளாகத்திற்குள் யூடியூப்பர்கள் ரசிகர்களிடம் பேட்டி எடுப்பதற்கு திரையரங்க உரிமையாளர்கள் அனுமதிக்க வேண்டாம் என திருப்பூர் சுப்பிரமணியம் அறிவுறுத்தியுள்ளார்.
  • மணிகண்டன்

    2 பேர் உயிரிழப்பு : 

  • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள தெய்வானை எனும் யானை மிதித்ததில் யானை பாகன் மற்றும் பாகனின் உறவினர் ஆகியோர் உயிரிழந்துள்ளார்.
  • கெளதம்

    பயிலரங்கு நிகழ்ச்சி :

  • இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிக்கை தகவல் அலுவலகம் சார்பில் சைபர் குற்றங்கள் மற்றும் சட்டவிரோத வெளிநாட்டு பயணம் குறித்த ஊடகவியலாளர் பயிலரங்கு நிகழ்ச்சி இன்று கோவை மாவட்டத்தில் நடைபெற்றது.
  • கெளதம்

    கனமழை எதிரொலி

  • நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கனமழை காரணமாக 9,000 ஏக்கர் அளவில் உப்பு உற்பத்தியும், இளம் சம்பா பயிர் விளைச்சலும் பாதிப்படைந்துள்ளது.
  • கெளதம்

    இலங்கையில் புதிய அமைச்சரவை

  • இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் புதிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்றுக்கொண்டது.
  • கெளதம்

    வானிலை தகவல்:

  • சென்னையில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
  • கெளதம்

    சபரிமலைக்கு சாமி தரிசனம் :

  • சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழகத்தைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் இன்று முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் குவிந்துள்ளனர்.
  • கெளதம்

    வெடிகுண்டு மிரட்டல்

  • திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
  • கெளதம்

    அதிமுகவுடன் தவெக கூட்டணி?

  • “அதிமுகவுடன் கூட்டணி என்பது முற்றிலும் தவறு” தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
  • கெளதம்

    கூட்டணி குறித்து தவெக விளக்கம்

    “2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி் அமைக்க வியூகம்” தவெக விளக்கம் கொடுத்துள்ளது.

    கெளதம்

    என். ஆனந்த் :

  • “பொய்கருத்து அடிப்படையில் பரப்பப்படும் செய்தியை மக்கள் புறக்கணிப்பார்கள் ” என தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவிப்பு.
  • கெளதம்

    என். ஆனந்த் :

    “தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கானது” தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் தெரிவிப்பு.

    கெளதம்

    குளிக்க அனுமதி :

  • 8 நாட்களுக்குப் பிறகு திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • கெளதம்

    மணிப்பூர் நீதிபதி பதவி:

  • மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
  • அகில் R

    பதவியேற்றார் ‘ஹரிணி அமரசூரிய :

  • சமீபத்தில் இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலில் அதிபர் அநுர குமரா திசநாயக கட்சி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது இலங்கையின் புதிய பிரதமராக ‘ஹரிணி அமரசூரிய’ பதவியேற்று கொண்டார்.
  • கெளதம்

    ராக்காயி டைட்டில் டீசர் :

  • நயன்தாரா நடிக்கும் ‘ராக்காயி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது.
  • செந்தில் நல்லசாமி இயக்கும் இத்திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தாஇசையமைக்கிறார் .
  • கெளதம்

    Nayanthara – Beyond The Fairy Tale

  • நடிகை நயன்தாராவின் பிறந்தநாளையொட்டிஅவரின் திருமண ஆவணப்படம் நள்ளிரவு 12 மணிக்கு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது .
  • கெளதம்

    மோடிக்கு உற்சாக வரவேற்பு:

  • பிரேசில் சென்ற பிரதமர் மோடிக்கு சமஸ்கிருத கீர்த்தனைகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது .
  • கெளதம்

    பிரேசில் சென்றடைந்த மோடி:

  • ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
  • கெளதம்

    மு.க.ஸ்டாலின் உரை

  • 16-ஆவது நிதிக் குழு உடனான ஆலோசனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.
  • கெளதம்

    பயணிகள் கவனத்திற்கு:

  • தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இன்று (18.11.2024) மதியம் 12 மணி முதல் 90 நாட்களுக்கு முன்பே ஆன்லைனில் முன்பதிவு செய்யும் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது.
  • அகில் R

    குளிக்கத் தடை :

  • கனமழை பெய்து வருவதன் விளைவாக தேனீ மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தொடர்ந்து 2-வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்காக குளிக்கத் தடை விதித்துள்ளனர்.
  • அகில் R

    சிங்கநடை போடும் ‘கங்குவா’ :

  • சூர்யா நடிப்பில் கடந்த நவ-14ம் தேதி வெளியான கங்குவா திரைப்படம், 3 நாட்களில் ரூ.127.64 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
  • அகில் R

    உலக கேரம் போட்டி :

  • அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலக கேரம் போட்டியில் தமிழக வீராங்கனையான சென்னையை சேர்ந்த காசிமா முதலிடம் பிடித்து 3 தங்கப்பதங்களை வென்று அசத்தியுள்ளார். அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
  • அகில் R

    புதிய கேப்டன் ‘பும்ரா’ :

  • பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில், ரோஹித் சர்மா பங்கேற்காததால் அவருக்கு பதிலாக ஜஸ்பிரீத் பும்ரா இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அகில் R

    மணிப்பூர் கலவரம் :

  • மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
  • 1 of 1

    Follow us

    Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    லேட்டஸ்ட் செய்திகள்