Live : ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் முதல்… மக்களவையை ஒத்திவைக்க கனிமொழி எம்.பி. நோட்டீஸ் வரை!

ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை இந்த செய்தி குறிப்பில் உடனுக்குடன் காணலாம்.

tamil live news

சென்னை : ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால், திருவண்ணாமலை தீப மலை அடிவார பகுதிகளில் நேற்று முன் தினம் ஏற்பட்ட நிலச்சரிவில், கவுதம், இனியா, மகா, வினோதினி, ரம்யா என 4 குழந்தைகள் மற்றும் ராஜ்குமார்-மீனா தம்பதி என மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர்.

தற்பொழுது, மண்சரிவில் சிக்கிய ஒவ்வொருவரின் உடல்களாக மீட்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள இருவரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றனர்.

ஃபெஞ்சல் புயல் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த இடைக்கால நிவாரணமாக ரூ.2,000 கோடியை விடுவிக்க வேண்டும். நிவாரணத்தை உடனடியாக வழங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை மதிப்பிட மத்திய குழுவை அனுப்ப வேண்டும் எனவும் மக்களவையை ஒத்திவைக்க வலியுறுத்தி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

1 of 1
கெளதம்

திமுக செயற்குழுக் கூட்டம்:

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், வரும் 18ம் தேதி புதன்கிழமை காலை 10 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் நடைபெறும். இதில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும்: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்

கெளதம்

குளிக்க தடை :

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை 5,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 6 மணிக்கு 14,000 கன அடியாகவும், காலை 8 மணியளவில் 21,000 கன அடியாகவும், காலை 9 மணியளவில் 23,000 கன அடியாகவும் அதிகரித்ததால் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை விதித்துள்ளது.

கெளதம்

11 மாவட்டங்கள் மழை:

தமிழகத்தில் இன்று கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்

கெளதம்

மாஞ்சோலை விவகாரம் :

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்தக்கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்துள்ள உயர்நீதிமன்றம், ஏற்கனவே ஒப்புக்கொண்ட படி விருப்ப ஒய்வுத் திட்டப் பலன்களை முறையாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

கெளதம்

அதிமுக உண்ணாவிரத போராட்டம்:

திருப்பூர் மாநகராட்சியால் நிறைவேற்றப்பட்ட உள்ளாட்சி வரி & கட்டணங்களை உயர்த்துவது, வணிக நிறுவனங்களுக்கான வாடகைக்கு 18% GST விதிப்பது மற்றும் தொழில்வரியை உயர்த்துவது தொடர்பான தீர்மானத்தை எதிர்த்து, அதிமுக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

மணிகண்டன்

விஜய் உதவி :

  • தவெக தலைவர் விஜய், பனையூரில் தனது கட்சி அலுவலகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கினார்.
  • மணிகண்டன்

    அமைச்சர் பொன்முடி : 

  • விழுப்புரத்தில் கனமழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பொன்முடி மீது பொதுமக்கள் சேற்றை வாரி இறைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
  • கெளதம்

    நிவாரணம் வழங்குகிறார் விஜய்:

    ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை டி.பி.சத்திரம் பகுதி மக்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று நிவாரணம் வழங்குகிறார். சுமார் 300 குடும்பங்களுக்கு நேரில் (பனையூர்) வரவழைத்து மழை நிவாரண உதவிகளை வழங்குகிறார்.

    மணிகண்டன்

    திருவண்ணாமலை நிலச்சரிவு : 

  • திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கிய 7 பேரில் 5 பேர் உடல் மீட்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 6வது உடல் மீட்கப்பட்டுள்ளது.
  • பால முருகன்

    கேரளாவின் ஆலப்புழாவில் பயங்கர விபத்து:

  • கனமழைக்கு இடையே டிடி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 5 மருத்துவ மாணவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதியதில் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
  • மணிகண்டன்

    எதிர்கட்சிகள் வெளிநடப்பு

  • அதானி விவகாரம் குறித்தும் மணிப்பூர் விவகாரம் குறித்தும் மக்களவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி மக்களவையில் எதிர்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். 
  • கெளதம்

    ரயில் சேவை மாற்றம்:

    திண்டுக்கல் – திருச்சி வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று (டிச.3) செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை வரை செல்லும் விரைவு ரயில்(16848) செங்கோட்டையிலிருந்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி சென்று, அங்கிருந்து மயிலாடுதுறை செல்லும் என மதுரை ரயில்வே கோட்டம் அறிவிப்பு.

    கெளதம்

    முதல்வர் ஆலோசனை :

    வெள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.3) ஆலோசனை நடத்தவுள்ளார்.

    கெளதம்

    1 மணி வரை மழை :

    கிருஷ்ணகிரி, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    பால முருகன்

    ராகுல் காந்தி போட்ட உத்தரவு!

  • ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கண்டு மனமுடைந்தேன் எனவும் காங்கிரஸ் தொண்டர்கள் உடனடியாக நிராவண உதவிகளை மேற்கொள்ளவும் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார்.
  • மணிகண்டன்

    பிரதமர் மோடி – மு .க.ஸ்டாலின் :

  • ஃ பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட கனமழை, வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசியில் அழைத்து விசாரித்துள்ளார். மத்திய அரசு சார்பில் தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
  • பால முருகன்

    அதிர வைக்குமா புஷ்பா 2?

  • டிசம்பர் 5-ஆம் தேதி வெளியாகவுள்ள புஷ்பா 2 படம் முதல் நாளில் 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
  • மணிகண்டன்

    சங்கராபரணி ஆற்றில் வெள்ளம்:

    புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் வீடூர் அணை திறக்கப்பட்ட நிலையில், சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    மணிகண்டன்

    மீண்டும் உயர்வு:

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.57,040-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.7,130-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    1 of 1

    Follow us

    Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    லேட்டஸ்ட் செய்திகள்