மதுபாட்டிலில் மிதந்த தவளையை பார்த்து அதிர்ச்சியடைந்த மதுபிரியர்.
ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில், 45 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்ட நிலையில் இருந்த மதுபான கடைகள், மே-7ம் தேதி திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஈசானிய தெருவில் உள்ள அரசு மதுபான கடையில், தென்பாதியை சேர்ந்த ஒருவர் மது வாங்க சென்றுள்ளார்.
இதனையடுத்து, அவர் வயல்பகுதிக்கு சென்று பாட்டிலை திறந்து, பாதியை கப்பில் ஊற்றி, மீதியை மூடி வைக்கும் போது, அந்த பாட்டிலில் ஏதோ மிதந்தது போல் தெரிந்துள்ளது. பின் அதனை உற்றுப்பார்த்த போது, பாட்டிலுக்குள் தவளை மிதந்துள்ளது.
இதனையடுத்து, அவர் அருகில் இருந்த ஒருவரிடம் கூறியுள்ளார். அவரின் உதவியுடன் அவர் மதுபாட்டில் வாங்கிய கடையில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், இந்த தகவல் வெளியே தெரியாமல் மறைக்க, அக்கடை ஊழியர் தவளையுடன் இருந்த மது பாட்டிலை பெற்றுக் கொண்டு, புது மதுபாட்டில்களை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, நாகை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அம்பிகாபதியிடம், தவளை கிடந்தது குறித்து கேட்ட போது, ‘இதுவரை தங்கள் கவனத்திற்கு தகவல் வரவில்லை. ஒயின் மற்றும் பீர் வகைகளை விற்பனை செய்யும் போது, பரிசோதித்தே விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ரம் போன்ற மதுவகைகள் நிறுவனங்களில் இருந்து வரும்போது, ஏதேனும் தவறு நடைபெற்றிருக்கலாம். எனவே இனிவரும் காலங்களில் மதுபாட்டில்களையும் நன்கு பரிசோதித்தே வழங்க ஊழியர்களை அறிவுறுத்துவோம்.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…