மது போதையில் போலீசுக்கு பயந்து ஓடியவர் கதவு கம்பியில் சிக்கிய பரிதாபம்!

Default Image

கன்னியாகுமரியில் மது அருந்தியவர் போலீசாரை கண்டு ஓடிய பொது வீட்டு கதவின் கம்பியில் சிக்கியதால், அவரை தீயணைப்பு துறையினர் மீட்டு உள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலுள்ள செட்டித்தெரு பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் மது அருந்திவிட்டு நண்பருடன் கைதைத்து கொண்டு தெருவில் நின்றுள்ளார். 

அப்பொழுது அங்கு போலீஸ் வந்ததால், அந்த இடத்தை விட்டு ஓடியுள்ளார். கதவு உள்புறமாக பூட்டி இருப்பதை அறியாமல் திறக்க முயன்றபோது கம்பிகளில் சிக்கியுள்ளார். 

பின் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் கம்பிகளை வெட்டி, அவரை அங்கிருந்து விடுத்துள்ளனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்