தமிழகம்:மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விரைவில் குணம் பெற்று பணிகளை தொடரவேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: ‘‘அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’’ என தெரிவித்தார்.
இதனையடுத்து,தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள்,தனது டுவிட்டர் பக்கத்தில் “அன்பு நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் கொரோனா தொற்றிலிருந்து விரைந்து மீண்டு, தனது பணிகளைத் தொடர விழைகிறேன்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து,கொரோனா தொற்று காரணமாக இராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசன் அவர்கள் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில்,நண்பர் கமல்ஹாசன்,முழுமையான நலம் பெற வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நண்பர் கமல்ஹாசன் அவர்கள் விரைவில் முழுமையான நலம் பெற்று தமது வழக்கமான பணிகளை தொடர வேண்டும் என்று விழைகிறேன்’,என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…