இவர்களுக்கு இலவச பயணம்…அனுமதிக்காத ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை – போக்குவரத்து துறை எச்சரிக்கை!

Published by
Edison

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்காத ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது விசாரணை மேற்கொண்டு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டல ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் தங்கள் பணியின் போது அரசு பேருந்துகளில்(A/C பேருந்து உட்பட) முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (Ex-MLA) மற்றும் அவர்களின் மனைவி அல்லது கணவர் அல்லது உதவியாளர் ஒருவருடன் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் மற்றும் அவர்களுக்கு உரிய இருக்கை வழங்கிட வேண்டும் எனவும்,மாறாக அவர்கள் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்காத ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது விசாரணை மேற்கொண்டு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக,அனைத்து மண்டல ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்  கூறப்பட்டுள்ளதாவது:

“நமது கழக பேருந்துகளில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்(Ex-MLA) மற்றும் அவர்களின் மனைவி/கணவர்/உதவியாளர் ஒருவருடன் இலவச பயணம் மேற்கொள்ள பேருந்துகளில் அனுமதிப்பதில்லை எனவும் மற்றும் அவர்களுக்கு உரிய இருக்கை வழங்கப்படுவதில்லை எனவும் புகார்கள் தெரிவிக்கப்படுகிறது.

எனவே,அனைத்து மண்டல ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் தங்கள் பணியின் போது நமது கழக பேருந்துகளில்(A/C பேருந்து உட்பட) முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (Ex-MLA) மற்றும் அவர்களின் மனைவி/கணவர்/உதவியாளர் ஒருவருடன் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் மற்றும் அவர்களுக்கு உரிய இருக்கை வழங்கிட வேண்டும் எனவும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும்,மேற்கண்டவாறு புகார் பெறும்பட்சத்தில் சம்மந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

35 mins ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

60 mins ago

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…

2 hours ago

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

3 hours ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

3 hours ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

3 hours ago