தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி சேர்க்கை திட்டத்தில் இலவச மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் விளம்பரப்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி சேர்க்கை அதாவது 25% இடங்களுக்கு இலவச மாணவர் சேர்க்கை ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால் RTE திட்டத்திற்கான இலவச மாணவர் சேர்க்கைக்கான கால அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை என்று ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது கால அட்டவணையை வெளியிட கூறி உத்தரவிடப்பட்டது. அதன்படி, ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் செப்டம்பர் 25 ஆம் தேதி வரை தனியார் பள்ளிகளில் உள்ள 25% இடங்களுக்கான இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கட்டாய கல்வி சேர்க்கை திட்டம் குறித்து போதிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லாத காரணத்தால், அது குறித்த விளம்பரத்தை ஆங்கில மற்றும் தமிழ் செய்திதாள்களில் வெளியிட வேண்டும் என்றும், மாணவர் சேர்க்கையை கண்காணிப்பதற்காக தனி கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அது மட்டுமின்றி, RTE திட்டத்தின் கீழ் உள்ள காலியான இடங்களில் வேறு மாணவர்களை சேர்க்க கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…