திருச்சி: ஸ்ரீரங்கம் வட்டம், மேக்குடி கிராம ஊராட்சி, கடியாக்குறிச்சி கிராமத்தில், கலெக்டர் ராஜாமணி பிரதம மந்திரியின் இலவச எரிவாயு வழங்கும் திட்டத்தின்கீழ் 100 நபர்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களும் புகையில்லா கிராமங்களாக திகழ வேண்டும் என்று மத்திய அரசு கிராம சுவராஜ் அபியான் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. புகையில்லா எரிவாயு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.ஒரு காலத்தில் நமது நாட்டில் அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று பெண்களை படிப்பதற்கு அனுப்பமாட்டார்கள். இன்று மத்திய, மாநில அரசுகள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து முதற்கட்டமாக ரூ.1600 மதிப்பிலான எரிவாயு அடுப்பு, ஒரு சிலிண்டர், ஒரு ரெகுலேட்டர், ஒரு டியூப் இலவசமாக வழங்கப்படுகிறது.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…