கடந்த ஆட்சியில் வழங்கிய இலவச முக கவசங்கள் தரமற்றவை – அமைச்சர் மா. சுப்பிரமணியன்

Default Image

பாதுகாப்பான முககவசங்களை வழங்காமல் நாடா துணியில் தயாரித்ததை வழங்கினார்கள் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றசாட்டு.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கிய இலவச முக கவசங்கள் தரமற்றவை என்றும் பாதுகாப்பான முககவசங்களை வழங்காமல் நாடா துணியில் தயாரித்ததை வழங்கினார்கள் எனவும் குற்றசாட்டியுள்ளார்.

தரமற்ற முகக்கவசம் விநியோகம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தரமான இலவச முகக்கவசம் வழங்குவதற்கான ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். தனியாரில் இலவச தடுப்பூசி முகாமை வரும் புதன்கிழமை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளதாகவும் கூறினார்.

மேலும், சட்டத்திற்கு புறம்பாக மதுபான பார்கள் நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல் பார் நடத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

mp kanimozhi
Chennai Super Kings vs Kolkata Knight Riders toss
BJP MLA Nainar Nagendran
amitshah about dmk
AIADMK bjp
goat vijay gbu ajith