எம்.எல்.ஏ. பழனியை தொடர்ந்து, அவரின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தற்பொழுது அவர்களை தொடர்ந்து அவரின் மாமியார் மற்றும் கார் டிரைவரூக்கு கொரோனா தொற்று உறுதியானது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து கொண்டே வருகிறது. ஒரே நாளில் சாரிசாரியாக ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது.
இதனால் அங்கு 19 ஆம் தேதி முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கை பிறப்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மனைவி, மகள், மருமகள், கார் டிரைவர் உள்பட 30 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் அவரின் மனைவி விஜயா, மற்றும் மகள் திவ்யாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், அவரின் மாமியார் பாளையம்மாள் மற்றும் கார் டிரைவர் டெய்லிஸ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர்கள் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…