எம்.எல்.ஏ. பழனியின் மனைவி, மகள் உட்பட நான்கு பேருக்கு கொரோனா..!

Default Image

எம்.எல்.ஏ. பழனியை தொடர்ந்து, அவரின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தற்பொழுது அவர்களை தொடர்ந்து அவரின் மாமியார் மற்றும் கார் டிரைவரூக்கு கொரோனா தொற்று உறுதியானது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து கொண்டே வருகிறது. ஒரே நாளில் சாரிசாரியாக ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது.

இதனால் அங்கு 19 ஆம் தேதி முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கை பிறப்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மனைவி, மகள், மருமகள், கார் டிரைவர் உள்பட 30 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் அவரின் மனைவி விஜயா, மற்றும் மகள் திவ்யாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், அவரின் மாமியார் பாளையம்மாள் மற்றும் கார் டிரைவர் டெய்லிஸ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர்கள் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்