எம்.ஜி.ஆர் பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை.
சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில், 2006 முதல் 2009 வரை துணைவேந்தராக பணியாற்றியவர் முர் முஸ்தபா உசைன். இவர் பணியில் இருந்த போது, 2008ம் ஆண்டு மே மதம், பிரிட்டிஷில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு விமானத்தில் சென்றுள்ளார்.
இதற்காக உயர்வகுப்பு இருக்கை முன்பதிவு செய்யப்பட்டு, விமான கட்டணமாக 2 லட்சத்து 99 ஆயிரத்து 673 ரூபாய் செலுத்தப்பட்டது. பின் இந்த டிக்கெட் ரத்து செய்யப்பட்டு, சாதாரண இருக்கையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர் வகுப்பு டிக்கெட்டில் பயணம் செய்ததாக கூறி, 2,22,332 ரூபாய் பணத்தை பல்கலைக்கழகத்தில் இருந்து கூடுதலாக பெற்றுள்ளார்.
மேலும், பிரிட்டிஷ், நார்வே, ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில், நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக ,டிக்கெட் கட்டணமாக ரூ.7,82,124 பணத்தை பெற்றுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கை விசாரித்த ஊழல் தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ், முஸ்தபா மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதற்காக கூறி, அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளார்.
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…