ஓபிஎஸ் மனைவி மறைவு…! முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இரங்கல்…!

Default Image

ஓபிஎஸ் மனைவி மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இரங்கல்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலக்ஷ்மி அவர்கள், கடந்த இரண்டு வாரங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், அவர் சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

இந்நிலையில், இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக மற்றும் திமுக போன்ற பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்  அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘முன்னாள் முதலமைச்சர் திரு OPS அவர்களின் துணைவி மறைந்தார் என்று அறிந்து வருத்தமடைந்தேன். திரு OPS அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்