தமிழ்நாட்டின் நியாயமான கோரிக்கைகளை மரியாதையாக ஆனால் உறுதியாக முன் வைத்த முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 2 நாள் அரசுமுறை பயணமாக, சென்னையில் இருந்து நேற்று காலை தனி விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். இதனையடுத்து,நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த அவர், தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் வழங்கி உள்ளார்.
இந்நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்களும் உடன் இருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘பாரதப் பிரதமர் திரு மோடி அவர்களிடம் தமிழ்நாட்டின் நியாயமான கோரிக்கைகளை மரியாதையாக ஆனால் உறுதியாக முன் வைத்த முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.திருமதி சோனியா காந்தி மற்றும் அரசியல் தலைவர்களுடன் திரு ஸ்டாலின் அவர்களின் சந்திப்புகளுக்கு என் வாழ்த்துக்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…