#BREAKING: முன்னாள் சிறப்பு டிஜிபி மனு தள்ளுபடி..!

Default Image

வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடத்த எதிர்ப்பு தெரிவித்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுபயணத்தின் போது அவரின் பாதுகாப்புப் பணியில் இருந்தார். சிறப்பு டிஜிபி தனது மாவட்டத்திற்கு வந்ததால் மரியாதை நிமித்தமாக பெண் எஸ்பி சந்தித்துள்ளார். அப்போது சிறப்பு டிஜிபி, பெண் எஸ்பியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து முன்னாள் டிஜிபி மற்றும் உள்துறைச் செயலரிடம் பெண் ஐபிஎஸ் புகார் அளித்தார்.

பின்னர், சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு உதவிய எஸ்.பியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 20-ம் தேதிக்குள் முடிக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், பெண் எஸ்.பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கில் தங்களிடம் நிறைய ஆதாரங்கள் மற்றும் தகவல்கள் இருப்பதாக கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அவரைத்தொடர்ந்து, சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் அவர்கள் இந்த நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என தெரிவித்து இவருடைய மனுவையும் தள்ளுபடி செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்