ஆட்சி மாற்றம் வந்தால் மாட்டிக்கொள்வீர்கள்.. அதிகாரிகளுக்கு மிரட்டலா.?! முன்னாள் அமைச்சர் பேச்சால் சர்ச்சை…

Published by
மணிகண்டன்

அதிகாரிகள், காவல்துறையினர் ஆளுகட்சிக்கு ஆதரவாக செயல்பட்டால், ஆட்சி மாற்றம் வரும்போது மாட்டிக்கொள்வீர்கள். எங்களுக்கு ஒன்றுமில்லை. உங்களுக்கு தான் பிரச்சனை. – ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியுள்ளார். 

தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

செங்கல்பட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைதாங்கி பேசினார். அதே போல, மற்ற மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர்கள் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அதே போல புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், அதிகாரிகள், காவல்துறையினர் ஆளுகட்சிக்கு ஆதரவாக செயல்பட்டால், ஆட்சி மாற்றம் வரும்போது மாட்டிக்கொள்வீர்கள். எங்களுக்கு ஒன்றுமில்லை. உங்களுக்கு தான் பிரச்சனை. ‘ என்று பேசியிருந்தார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி.வேலுமணி சம்பந்தமான இடங்களில் லஞ்சஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். அது சம்பந்தமாக தான் முன்னாள் அமைச்சர் இவ்வாறு பேசி, அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுகிறார் என்றாவாறு தமிழக அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

6 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

19 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 day ago