நள்ளிரவில் ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ சந்தித்த முன்னாள் அமைச்சர் வேலுமணி.
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்கள், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது அரசு ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ.1.20 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, 60 மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நேற்று மாலை முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நிறைவு பெற்றது.
அதன்பின் எஸ்.பி.வேலுமணி, நள்ளிரவில் சென்னை பசுமை வழிசாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்களின் வீட்டிற்கு சென்று, ஈபிஎஸ் மற்றும் அங்கிருந்த முன்னாள் அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மற்றும் விசாரணை குறித்து அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-ஐ சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். மேலும், இன்று அதிமுகவின் உயர்மட்டகுழுவின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…