முன்னாள் அமைச்சர் உதயகுமார் கைது – எடப்பாடி பழனிசாமி ட்வீட்..!

Default Image

அமைதியான முறையில் போராடிய முன்னாள் அமைச்சர், திருமங்கலம் சட்டமன்றஉறுப்பினர், திரு‌.உதயகுமார் அவர்களையும், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.அய்யப்பன் அவர்களையும், கைது செய்த இந்த விடியா அரசை கண்டிக்கிறேன் என ஈபிஎஸ் ட்வீட். 

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால், உரிய அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 200 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கடந்த அம்மா அரசில் பொதுமக்களுக்கும், உள்ளூர் வாசிகளுக்கும், விவசாயிகளுக்கும் எந்தவித பாதிப்புமின்றி செயல்பட்டு வந்த மதுரை கப்பலூர் சுங்க சாவடி தற்போது அனைத்து தரப்பினருக்கும் இடையூறாக செயல்பட்டுவரும் நிலையில் அதனை அகற்ற கோரி,அமைதியான முறையில் போராடிய முன்னாள் அமைச்சர், திருமங்கலம் சட்டமன்றஉறுப்பினர், திரு‌.உதயகுமார் அவர்களையும், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.அய்யப்பன் அவர்களையும், கைது செய்த இந்த விடியா அரசை கண்டிக்கிறேன். திரு.உதயகுமார் அவர்களிடத்தில் திமுக அரசின் அடக்குமுறை செயல்கள் குறித்து தொலைபேசியில் விசாரித்தேன்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்