முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஓடி ஒளியக்கூடாது- டிடிவி தினகரன் ..!

Default Image

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓடி ஒளியக்கூடாது. வழக்கை சந்திப்பது தான் நல்ல அரசியல்வாதிக்கு அழகு என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

இன்று அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, இலக்கு அடையும் வரை நாங்கள் துவண்டு போக மாட்டோம். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓடி ஒளியக்கூடாது. வழக்கை சந்திப்பது தான் நல்ல அரசியல்வாதிக்கு அழகு. அண்ணன் எடப்பாடி ஆட்சியில் எதையெல்லாம் செய்தாரோ அதையெல்லாம் தாண்டி தற்போது மு.க. ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார்.

அண்ணன் எடப்பாடி வழியில் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்கிறார். கொரோனா சமூக பரவலாக ஆகிவிட்டது என சுகாதாரத்துறை அமைச்சர் கூறி வரும் நிலையில் முதல்வர் தஞ்சை, திருச்சியில் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டுள்ளார். மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உடனடியாகமுதல்வர் நிவாரணம் கொடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live
live ilayaraja
rahul gandhi bjp
good bad ugly - gv prakash
India vs New Zealand Final
tvk poster
TVKVijay - TN govt