முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் வாக்குவாதம்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிமாக சொத்து சேர்த்ததாக வேலூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், ஜோலார்பேட்டையில் உள்ள கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், சென்னை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெறுகிறது.
திருப்பத்தூர் ஜோலார்பேட்டை இடையம்பட்டியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காவல்துறையினருடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வீட்டின் வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் உடன் அதிமுகவினர் மோதலில் ஈடுபட்டதாகவும், அப்போது கைது செய்து வேனில் ஏற்றிய நிலையில், போலீசாரை தள்ளிவிட்டு கீழே இறங்கியதாகவும் தகவல் கூறப்படுகிறது.
2011 முதல் 2021 வரை ஜோலார்பேட்டை எம்எல்ஏவான கேசி வீரமணி, அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தததாக தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், எம்ஆர் விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணி ஆகியோர் வீடுகளில் சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது கேசி வீரமணி வீட்டில் சோதனை நடைபெறுகிறது.
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…