Minister Udhayanidhi stalin - Former ADMK Minister Jayakumar [File Image]
சென்னையில் ஏற்பட்ட கனமழை பெரு வெள்ளத்திற்கு நிவாரண உதவிக்காக மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு பேரிடர் நிவாரண நிதியை கேட்டு இருந்தது. இந்த சமயத்தில் பாஜக எம்பி ஒருவர் பேசுகையில், தமிழக அரசு நிவாரண நிதி கேட்டவுடன் கொடுப்பதற்கு மத்திய அரசு என்ன ஏடிஎம் இயந்திரமா என விமர்சித்தார்.
இதற்கு பதில் கூறும் வகையில் அமைச்சர் உதயநிதி பேசுகையில், நாங்கள் யாரும் அவர்கள் அப்பா வீட்டு சொத்தை கேட்கவில்லை. தமிழக மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து தான் பேரிடர் நிவாரணையை கேட்கிறோம் என்று காட்டமாக விமர்சித்து இருந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இந்த விமர்சனம் பாஜகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பலைகளை உண்டாக்கியது.
உதயநிதி ஸ்டாலின் கேள்வியால் தான் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி செல்கிறார் – வைகோ!
நேற்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்பு குறித்தும் மத்திய அரசின் நிவாரண நிதி அறிக்கை குறித்தும் கூறுகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கும் கடும் எதிர்ப்பை தெரிவித்தார். அதில், உதயநிதி ஸ்டாலின் பேசும் பாஷை சரியாக இல்லை. அவர் பொறுப்புடன் பேச வேண்டும் என விமர்சித்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நான் யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை. தற்போதும் கூறுகிறேன், மதிப்பிற்குரிய நீதியமைச்சர் நிர்வாக சீதாராமனின் மதிப்பிற்குரிய அப்பாவின் சொத்தை நாங்கள் கேட்கவில்லை. எங்கள் வரிப்பணத்தில் இருந்து தான் நிவாரண நிதியை கேட்கிறோம் என்று மீண்டும் வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பாக இன்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளரிடம் பேசுகையில், தென்மாவட்டங்களில் வாய்க்கால் குளங்களை முறையாக தூர்வாரி இருந்தால் இவ்வளவு பெரிய உயிர் சேதம், பொருட்சேதம் ஹெலிகாப்டரில் வந்து சாப்பாடு போடும் நிலைமையும் வந்திருக்காது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான். அவருக்கு வாய் தொடுக்கு கொஞ்சம் அதிகம். அதனால், வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது. பொறுப்பாக கருத்துக்களை கூற வேண்டும். ஒரு பக்குவம் இல்லாத அரசியல்வாதி உதயநிதி ஸ்டாலின். வாய் கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்கிறார். அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்த உடன் தற்போது ‘பல்ட்டி’ அடிக்கிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…