காஞ்சிபுரத்தில் திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை – 3 பேர் கைது!

Published by
Rebekal

காஞ்சிபுரத்தை சேர்ந்த திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அதிமுகவை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மதூர் கிராம பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் தான் 56 வயதுடைய சண்முகம். இவர் திமுக முன்னாள் ஊராட்சி மன்றத்தின் தலைவராகவும், திமுக சாலவாக்கம் ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளராகவும் இருந்துள்ளார். மேலும், இவர் ரியல் எஸ்டேட் மற்றும் சாலை காண்ட்ராக்ட் பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. சாலை காண்ட்ராக்ட் பணி ஒன்றின் போது இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

வாலாஜாபத் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரக்கூடிய சண்முகம் தினமும் தனது சொந்த ஊரான மதூர் கிராமத்திற்கு சென்று விட்டு இரவில்  வாடகை வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அதே போல நேற்று இரவு 9.30 மணி அளவில் சண்முகம் மதூர் கிராமத்தில் இருந்து தனது வீட்டிற்கு செல்லும் பொழுது மதூர்  பெட்ரோல் பங்க் அருகில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சண்முகத்தை வழிமறித்து இரும்பு ராடு கொண்டு முகத்தில் தாக்கியுள்ளனர்.

மேலும் அந்த இடத்திலேயே வைத்து அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாலவாக்கம் போலீசார் உயிரிழந்த சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம் எஸ்பி சுதாகர் அவர்கள் நேரில் பார்வையிட்டு கொலை செய்த மர்ம கும்பலை தீவிரமாக தேடும் பணியை மேற்கொண்டு வருகிறார். மேலும், முன்விரோதம் காரணமாக தான் கொலை நடைபெற்று உள்ளதா? வேறேதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதுடன், இது தொடர்பாக அதிமுக பிரமுகர் உள்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

பேட்டிங்கில் மிரட்டல்…பவுலிங்கில் அசத்தல்! ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத்!

பேட்டிங்கில் மிரட்டல்…பவுலிங்கில் அசத்தல்! ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத்!

அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…

4 hours ago

நீட் தேர்வில் மோசடி…தி.மு.க மன்னிப்புக் கேட்க வேண்டும்! த.வெ.க தலைவர் விஜய் கண்டனம்!

சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…

5 hours ago

ராஜஸ்தான் பந்துகளை ராக்கெட் விட்ட சாய் சுதர்சன்! குஜராத் வைத்த பெரிய இலக்கு?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…

5 hours ago

விரைவில் மருந்துகளுக்கு பெரிதளவில் இறக்குமதி வரி! அதிபர் ட்ரம்ப் அலர்ட்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…

5 hours ago

“இலவு காத்த கிளி போல இபிஎஸ் காத்திருந்தார்!” திருமாவளவன் கடும் விமர்சனம்!

சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…

9 hours ago

உஷார் மக்களே.., ஜிப்லி-க்காக போட்டோ கொடுக்கிறீங்களா? சைபர் கிரைம் எச்சரிக்கை!

சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…

9 hours ago