திமுகவின் முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் சென்னையில் மாரடைப்பால் காலமானார் – முக ஸ்டாலின் இரங்கல்
திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. திமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ரகுமான்கான். திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராகவும் ரகுமான் கான் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் இறந்ததையடுத்து முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், கழகத்தின் இடி முழக்கம், மாணவப் பருவத்திலேயே போர்ப்பரணி பாடிய அண்ணன் ரகுமான்கானை இழந்து தவிக்கிறேன். அவர் தந்த ஆலோசனைகள் அட்சயபாத்திரம். அவரது மூச்சு நின்றாலும் அவரின் எழுத்தும், பேச்சும் என்றும் நம் கண்களிலேயே நிற்கும்! அண்ணனின் மறைவிற்கு கனத்த இதயத்துடன் என் ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…