ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி நியமிக்க கோரிய வழக்கின் விசாரணையை ஜுன் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி நியமிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தி வழக்கு தொடரப்பட்டது .அந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.
இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.அதில்2016-2017 ஆம் ஆண்டுக்கான கணக்குப்படி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.16.37 கோடி சொத்துகள் உள்ளது. 2016-2017ஆம் ஆண்டுக்கான கணக்குப்படி ஜெயலலிதாவுக்கு வங்கியில் ரூ.10 கோடி இருப்பு உள்ளது.
அதேபோல் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் தோட்ட வீடு உள்பட 4 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. 1990-91 முதல் 2011-12 வரை ஜெயலலிதாவுக்கு ரூ10.12 கோடி செல்வ வரி பாக்கி உள்ளது.
2005-06 முதல் 2011-12 வரை ரூ.6.62 கோடி ஜெயலலிதாவுக்கு வருமான வரி பாக்கி உள்ளது என்று அறிக்கையில் தகவல் தெரிவித்த்தது.இதன் பின் வழக்கு விசாரணையை ஜுன் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…