இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், படகியுமான பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இலங்கையில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். அப்போது சிகிச்சை பலனின்றி ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பவதாரணியின் உடல், தேனியில் இருக்கும் இளையராஜாவின் பண்ணை வீட்டில் அவரது தாயார் சின்னதாய் மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோரது உடல் அருகே இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதனையடுத்து, அஞ்சலிக்காக தேனி மாவட்டத்தில் அவருடைய உடலும் வைக்கப்பட்டு இருக்கிறது.
மகள் பவதாரிணியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய இளையராஜா!
எனவே, மக்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் நேரில் சென்று தனது அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில், முன்னாள் முதல்வர் ஒ பன்னீர் செல்வம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். செலுத்திய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து உருக்கமாக பேசினார். இது குறித்து பேசிய அவர் ” இளையராஜாவின் அன்பு மகள் பவதாரிணி மறைவு இசை துறையை சேர்ந்தவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் பெரிய இழப்பு.
தன்னுடைய இனிமையான குரலில் உலாவந்த பவதாரிணி மறைவு என்னுடைய தேனி மாவட்டத்திற்கு பெரிய இழப்பாகும் என்பதனை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய மறைவால் வாடும் அவருடைய குடும்பத்திற்கு நான் இந்த நேரத்தில் ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன். பவதாரிணி ஆன்மா சாந்தியாடவேண்டும்” எனவும் ஓ.பன்னீர் செல்வம் உருக்கமாக பேசியுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…