வைரலாகும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிட புகைப்படம்!

Default Image

சென்னை மெரினா கடற்கரையில் அமையவுள்ள முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் நினைவிடத்தின் மாதிரிபுகைப்படம் வெளியானது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் அரும்பணிகளை போற்றும் விதமாக மெரினா கடற்கரை அருகே காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில், ரூ.39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் பேரவையில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், கலைஞரின் வாழ்வின் சாதனைகள், சிந்தனைகளை, இளைய தலைமுறையினரும் அறியும் வகையில் நவீன விளக்கப்படங்களுடன் புதிதாக அமைக்கப்பட உள்ள கலைஞர் நினைவிடத்தின் மாதிரி வடிவமைப்பு புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்க்கும்போது மிக பிரமாண்டமாகவும், சூரியன் உதயமாகுவது போல் அமைந்துள்ளது. மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கதை எழுத்தாளர் என்று குறிக்கும் விதமாக அவரது நினைவிட மாதிரி வரைபடத்தில் இங்க் பேனா வடிவிலான ஒரு பிரமாண்ட தூண் உடன் அமைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்